Breaking News

ஆவடி காய்கறி மார்க்கெட்டை ஆக்கிரமித்துள்ள வட இந்திர்கள்! - நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி?

ஆவடி :

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சிக்கு அருகே அமைந்துள்ள ஆவடி மாநகராட்சிக்கு சொந்தமான காய்கறி மார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் பெரும்பான்மையானோர் வட நாட்டுக்காரர்கள் என்று பொதுமக்கள் குமுறுகின்றனர்.


நேரடியாக ஆவடி மாநகராட்சி நிர்வாகம் வட இந்தியர்களுக்கு குத்தகைக்கு விட்டிருக்கிறார்களா? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர். வட நாட்டுக்காரர்கள் அங்கு வியாபாரம் செய்வதால் விலைவாசியும் அதிகரித்து உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். 

வாடகை எடுத்த நபர்களே கடையை நடத்தினால் ஓரளவுக்கு காய்கறிகளின் விலைவாசி சரியாக இருக்கும்.

கடைகளை குத்தகைக்கு எடுத்தவர்களே கடையை நடத்தவேண்டும்.  குறைவான வாடகைக்கு எடுத்து மேல் வாடகைக்கு விடுவதால் காய்கறிகளின் விலைகளை உயர்த்தி விற்பனை செய்கின்றனர். 

ஆவடி காய்கறி மார்க்கெட்டில் வடஇந்தியர்களுக்கு மேல் வாடகை விட்டு இருக்கிறார்களா? என்பது குறித்து மாநகராட்சி நிர்வாகம் ஆராய்ந்து களை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கை வலுக்கின்றன... இல்லையென்றால் பொதுமக்கள் வழக்கு தொடரவும் தயாராகிவருகின்றனர். நடவடிக்கை பாயுமா என்பதை பொறுத்திருந்துபார்ப்போம்...

No comments

Thank you for your comments