11 ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு - காஞ்சிபுரம் மாவட்டத்தில் 86.98 சதவிகிதம் தேர்ச்சி
காஞ்சிபுரம், மே.14:
இதுகுறித்து ஆட்சியர் கலைச்செல்வி மோகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
11 ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியானது.இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6676 மாணவர்களும்,7346 மாணவியர்களும் உட்பட மொத்தம் 14022 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 12196 மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர்.
தேர்ச்சி சதவிகிதத்தை பொறுத்தவரை மாணவர்கள் 81.32 சதவிகிதமும், மாணவியர் 92.12 சதவிகிதமும் தேர்ச்சியடைந்துள்ளனர்.
11 ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் கடந்த ஆண்டை விட 0.31 சதவிகிதம் குறைவாக தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் காஞ்சிபுரம் மாவட்டம் 11 ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் 33 வது தரவரிசையினை பெற்றுள்ளது.
No comments
Thank you for your comments