Breaking News

காலை உணவுத் திட்டத்தை பிற மாநிலங்களும் பின்பற்றுகின்றன - கி.வீரமணி பேச்சு

காஞ்சிபுரம்,ஏப் 11:

திமுக அரசு செயல்படுத்தி வரும் காலை உணவுத் திட்டத்தின் நன்மைகளை தெரிந்து கொண்டு பிறமாநிலங்களும் பின்பற்றத் தொடங்கிவிட்டதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வியாழக்கிழமை காஞ்சிபுரத்தில் பேசினார்.


காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சி சார்பில் திமுக வேட்பாளர் க.செல்வம் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு தெரிவித்து வாக்குகள் சேகரிப்பதற்காக காஞ்சிபுரம் வணிகர் வீதியில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசியது.

தமிழகத்தில் 7 வது முறையாக பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரம் செய்திருக்கிறார்.தமிழகத்திலேயே குடியிருந்தாலும் பாஜக தமிழகத்தில் காலூன்ற முடியாது.தமிழகத்தில் பாஜக எப்படியாவது காலூன்ற ஆசைப்படுகிறது.



ஆனால் காலே இல்லையென்ற நிலையில் எப்படி கால் ஊன்ற முடியும் என்பதே எனது கேள்வியாகும்.திமுக அரசு செயல்படுத்தி வரும் பல மக்கள் நலத்திட்டங்கள் மிகுந்த பாராட்டுக்குரியதாகவே இருக்கின்றன.காலை உணவுத் திட்டம் வந்த பிறகு பள்ளியில் பயிலும் மாணவர்களிடையே சாதியம் ஒழிந்துள்ளது.

சமூக நீதியை கற்கும் அளவிற்கு இத்திட்டத்தால் மாணவர்கள் மகிழ்ச்சியைடந்துள்ளனர்.காலை உணவு சமைக்க நேரமில்லாத பல தாய்மார்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

காலை உணவுத் திட்டத்தின் நன்மைகளை பிற மாநிலங்களும் தெரிந்து கொண்டு அவைகளும் செயல்படுத்த தொடங்கி விட்டன.காஞ்சிபுரத்தில் தொடங்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் பெண்களுக்கு மாதம் தோறும் முறையாக அவரவர்களது வங்கிக்கணக்கு வந்து விடுகிறது. தாய்வீட்டு சீதனம் கூட முறையாக வருவதில்லை என்றும் கி.வீரமணி பேசினார்.

தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்துக்கு எம்எல்ஏக்கள் க.சுந்தர்,எழிலரசன், மேயர் எம்.மகா லட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.துணை மேயர் ஆர்.குமரகுருநாதன் உட்பட இந்தியா கூட்டணிக் கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


No comments

Thank you for your comments