காஞ்சிபுரம் கிருஷ்ணா கல்லூரியில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி, ஆட்சியர் பங்கேற்பு
காஞ்சிபுரம், ஏப்.8:
காஞ்சிபுரத்தை அடுத்த கீழம்பியில் உள்ள கிருஷ்ணா கல்லூரியில் 100 சதவிகிதம் வாக்களிப்பை வலியுறுத்தும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.ஏராளமான மாணவியர் தேர்தல் விழிப்புணர்வு தொடர்பான கோலமும், மாணவ, மாணவியர் சிலர் ஓவியமும் வரைந்திருந்தனர்.
கோலங்கள் வரையப்பட்டிருப்பதை பார்வையிட்டு சம்பந்தப்பட்ட மாணவியரை ஆட்சியரும்,தேர்தல் அலுவலருமான கலைச்செல்வி மோகன் பாராட்டினார். ஓவியங்களை வரைந்த மாணவர்கள் அதனை ஆட்சியரிடம் வழங்கி வாழ்த்துப் பெற்றனர்.
இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் கு.வெங்கடேசன் தலைமை வகித்தார்.மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் க.கவிதா, கல்லூரியின் துணை முதல்வர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அரசு அலுவலர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் மாணவ,மாணவியர்கள் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments