Breaking News

ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு நிழ்ச்சி

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்டம், 2024 - பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, காஞ்சிபுரம்  ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர்  திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள்  தலைமையில் நடைபெற்றது. 


2024-ம் ஆண்டு எதிர்வரும் பாராளுமன்ற பொது தேர்தலை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் 100% வாக்களிக்க வேண்டும் என்பதற்காக (SVEEP-Systematic Voters Education and Electoral Participation) பொதுமக்களிடையே விழிப்புணர்வு  ஏற்படுத்தும் வகையில், 100% வாக்களிப்போம் என தேர்தல் உறுதிமொழி எடுத்தல், பேனர்கள், போஸ்டர்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வைத்து பிரச்சாரம் செய்தல், மாணவ/ மாணவர்களுக்கு கலாச்சார போட்டிகள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துதல், கல்லூரி மாணவர்களை ஒன்று திரட்டி தேர்தல் விழிப்புணர்வு பேரணி நடத்துதல், அரசு களப்பணியாளர்களை கொண்டு பொதுமக்களின் வீட்டிற்கே சென்று துண்டு பிரசுரங்கள் வழங்குதல், மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் உறுதிமொழி எடுத்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிற்கே சென்று வாக்குபதிவு செய்துவது குறித்து விழிப்புணர்வு அளித்தல், சுயஉதவிக்குழுக்களை கொண்டு மாவட்ட அளவில் ரங்கோலி போட்டிகள் நடத்துதல் மனித சங்கலி, பைக் பேரணி போன்ற விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


அதன்படி, இன்று காஞ்சிபுரம் ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நடைபெற்ற தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள்  தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி வரையப்பட்ட தேர்தல் விழிப்புணர்வு கோலங்களை பார்வையிட்டார். 


கல்லூரி மாணவ/மாணவியர்கள் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழியை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் எடுத்துக் கொண்டு, மாணவ/மாணவியர்கள் தாங்கள் வரைந்த தேர்தல் விழிப்புணர்வு ஓவியங்களை  மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

இவ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குநர் திருமதி.க.கவிதா, கல்லூரி முதல்வர், ஆசிரியர்கள், கல்லூரி மாணவ/மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments