Breaking News

கலைப்பிரியர்கள் அறக்கட்டளை சார்பில் ஐம்பெரும் விழா

 கோவை :

கோவை மாவட்டம் காரமடை  மேம்பாலம் அருகில் அமைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் கலைப்பிரியர்கள் அறக்கட்டளை சார்பில் 33வது ஆண்டு விழா, பரிசளிப்பு விழா, விருதுகள் வழங்கும் விழா, பாராட்டு விழா, கலை விழா 2024 போன்றவை அடங்கிய ஐம்பெரும் விழா  நடைபெற்றது. 


விழாவிற்கு கலைப்பெரியர்கள் விழாக்குழு தலைவர் ஆர் சீனிவாசன் தலைமையும், அறக்கட்டளை தலைவர் ஆர்.நடராஜன் வரவேற்பும் அளித்திருந்தனர். 

இவ்விழாவில் சிறந்த சமூக சேவைகள் மூலம் சமூகத்தில் சிறந்த விளங்கிய நபர்களுக்கு விருதுகளும் மற்றும் சுற்றுவட்டார பள்ளிகளிலிருந்து பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற  குழந்தைகளுக்கு பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றது. 

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக விருதுகள் மற்றும் பரிசுகளை வழங்க டி.ஆர்.எஸ்.பிராப்பர்ட்டி டெவலப்பர்ஸ் நிறுவனர் டி.ஆர்.சண்முகசுந்தரம், திமுக நகர கழக செயலாளர் ஆர்.வெங்கடேஷ், காரமடை கற்பக விநாயக சிட்பண்ட்ஸ் நிறுவனர் கே.மனோகரன், காரமடை நகர மன்ற உறுப்பினர்கள் எஸ்.சித்ரா, வனிதா சஞ்சீவ், மருதூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அறிவு ரங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். 

குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், சிலம்பாட்டம், தீப்பந்தம், வாள் வீச்சு, கராத்தே, பரதநாட்டியம், யோகாசனம், போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

No comments

Thank you for your comments