Breaking News

தைவானில் கடும் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடுப்பு

 தைபே, ஏப்.3-

தைவானில் இன்று (புதன்கிழமை) அதிகாலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் இது 7.4 ஆக பதிவாகி உள்ள தெரிவித்துள்ள ஜப்பான் வானிலை ஆய்வு மையம், சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளது.

தைவான் நாட்டின் கிழக்கு கடற்கரையில் இன்று (புதன்கிழமை) 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  கிழக்கு தைவானில் பெய்பின் தெரு, ஹுவாலியன் நகரம், ஹுவாலியன் கவுண்டி உள்ளிட்ட பகுதிகளில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கத்தால் தைவான் நகரின் பல்வேறு பகுதிகளில் கட்டிடங்கள் உருக்குலைந்தன. இதையடுத்து நாட்டின் பல்வேறு பகுதிகள் இதன் அதிர்வுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. 

சுனாமி

இந்த நிலநடுக்கத்தை அடுத்து, தைவான், ஜப்பான், பிலிப்பின்ஸ் நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 3 மீட்டர் (9.8 அடி) வரை சுனாமி ஏற்படும் என்று ஜப்பானின் வானிலை ஆய்வு நிறுவனம் கணித்துள்ளது.

25 ஆண்டுகளில் இல்லாத அளவில் பெரும் பாதிப்புகள்

25 ஆண்டுகளில் இல்லாத அளவில் இந்த நிலநடுக்கம் அந்நாட்டில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அந்நாட்டில் கட்டடங்கள் அனைத்தும் குலுங்கின. நகரின் பெரும்பாலான பகுதிகளில் வீடுகள் உருக்குலைந்தன.

காலை எட்டு மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், ஹுவாலியின் பகுதியில் இருந்த ஐந்து மாடி கட்டடத்தின் முதல் தளம் முற்றிலுமாக சரிந்து விழுந்தது. இதில், அக்கட்டடம் 45 டிகிரி கோணத்தில் சாய்ந்துள்ளது. அதில், இடிபாடுகளில் சிக்கியுள்ள ஏராளமான பொதுமக்களை மீட்கும் பணியில் தீயணைப்புத்துறை மற்றும் மீட்புப் படையினர் உள்ளிட்டோர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதோடு, தேசிய பேரிடர் மீட்பு படையினரும் இப்பணியில் இணைந்துள்ளனர்.

இந்த விபத்தில் ஹுவாலியன் கவுண்ட் பகுதியில் இதுவரை சுமார் 4 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இது தொடர்பாக எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இன்னும் வெளியாகவில்லை.

தைவானின் கிழக்கு நகரமான ஹுவாலியினில் கட்டிடங்கள் அசைந்தது குறித்த வீடியோ தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.

சாலைகள் சேதம்  - போக்குவரத்து பாதிப்பு

இருபத்து மூன்று மில்லியன் தொகை கொண்ட மக்கள் வசிக்கும் குட்டி தீவு ஆகிய இந்நாட்டில் ஏற்பட்ட இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், தைபே மாநகரின் முக்கிய சாலைகள் சேதமடைந்த நிலையில், அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, பொதுமக்கள் அனைவரும் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு வருகின்றனர்.

மின்சாரம் துண்டிப்பு

பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கை காரணமாக ஜப்பானின் ஒகினாவாவின் தெற்கு மாகாணத்திற்கு அருகிலுள்ள கடலோரப் பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரயில் சேவை நிறுத்தம்

தைபேயில் சுரங்கப்பாதை சேவையும், தீவு முழுவதும் ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது.

குயிஷான் தீவு உடைந்தது

இதனிடையே இந்த நிலநடுக்கத்தால், தைவான் அருகே பசிபிக் பெருங்கடலில் குயிஷான் தீவின் பெரும் பகுதி உடைந்து கடலுக்குள் மூழ்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்

இந்த நிலநடுக்கம் தொடர்பாக, அந்நாட்டின் நிலநடுக்க கண்காணிப்பு மையம் வெளியிட்ட தகவலில்,  ‘தைவானில் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆகவும்; 

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், ‘7.4 ஆகவும்‘ பதிவாகியுள்ளது.  

இந்த நிலநடுக்கம் அந்நாட்டின் தென்மேற்கு பகுதியில் சுமார் 18 கிலோமீட்டர் (11.1 மைல்) தூரத்தில், சுமார் 35 கிலோமீட்டர் (21 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. 

யுனைடெட் ஸ்டேட்ஸ்

இதுகுறித்து யுனைடெட் ஸ்டேட்ஸ் புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், அடுத்தடுத்த நிலநடுக்கங்களில் ஒன்று 6.5 அளவு மற்றும் 11.8 கிலோமீட்டர் (7 மைல்) ஆழத்தில் இருந்ததாக தெரிவித்துள்ளது.

மியாகோ-யாயாமா தீவுகள்

ஜப்பானின் தெற்கு ஜப்பானிய தீவுக் குழுவான ஒகினாவாவிற்கு 3 மீட்டர் (9.8 அடி) வரை சுனாமி ஏற்படும் என்று ஜப்பான் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்ட 15 நிமிடங்களுக்குப் பிறகு யோனகுனி தீவின் கடற்கரையில் 30 சென்டிமீட்டர் (சுமார் 1 அடி) அலை கண்டறியப்பட்டது. மியாகோ மற்றும் யாயாமா தீவுகளின் கடற்கரைகளையும் அலைகள் தாக்கக்கூடும் என்று ஜப்பான் தெரிவித்துள்ளது.

நில அதிர்வு மைய இயக்குநர்

தைவானின் கிழக்கில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் "25 ஆண்டுகளில் இல்லாத வலிமையானது" என்று தைபேயின் நில அதிர்வு மையத்தின் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

எச்சரிக்கை

தைவான் நிலநடுக்கத்தை அடுத்து, பிலிப்பின்ஸ் நாடு, சுனாமி குறித்து எச்சரித்ததுடன், கடலோரப் பகுதிகளை காலி செய்யுமாறு அறிவுறுத்தி உள்ளது.

விமான சேவை நிறுத்தம்

தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி எச்சரிக்கை காரணமாக ஜப்பானின் தெற்குப் பகுதியான ஒகினாவாவில் உள்ள முக்கிய விமான நிலையத்தில் புதன்கிழமை விமானங்கள் நிறுத்தப்பட்டதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதேநேரத்தில், தைவானில் பெரும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி அச்சுறுத்தல் "இப்போது கடந்துவிட்டது" என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாகும்

பொதுமக்கள் தங்களின் வீடுகளை இழந்துள்ளனர். மேலும், இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியிருக்க வாய்ப்புகள் இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகமாகும் என அஞ்சப்படுகிறது.






















No comments

Thank you for your comments