திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து தலைமை கழக பேச்சாளர் கிருஷ்ணமூர்த்தி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்
காஞ்சிபுரம், ஏப்.11-
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய உட்பட்ட அய்யம்பேட்டை ஊராட்சி பொதுக்கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட கழக செயலாளர் சுந்தர் தலைமை தாங்கினார் முன்னிலை பொறுப்பினை ஒன்றிய செயலாளர் சேகர் வகித்தார்
காஞ்சிபுரம் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து தலைமை கழக பேச்சாளர் கிருஷ்ணமூர்த்தி உதய சூரியன் சின்னத்திற்கு பொது மக்களிடையே வாக்குகளை சேகரித்த ார் திமுக அரசு சாதனை விளக்கி பேசினார்
மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்திலிருந்து 40 தொகுதிகளையும் திமுக வேட்பாளர் வெற்றி பெற்று செல்ல வேண்டும் பாஜக அரசை தூக்கி எறிய வேண்டும் ஆகையால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
ஒன்றிய செயலாளர் சேகர் ஒன்றிய அவைத்தலைவர் சுந்தரமூர்த்தி ஒன்றிய கவுன்சிலர் எழிலரசி சுந்தரமூர்த்தி இளைஞர் அணி ஒன்றிய செயலாளர் சஞ்சய் காந்தி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments