Breaking News

சத்துணவு மையங்களுக்கு வழங்கப்பட்ட ISO 9001:2015 தரச்சான்றுதழ் வழங்கல்

காஞ்சிபுரம்  :

காஞ்சிபுரம் மாவட்டம், சத்துணவு மையங்களுக்கு வழங்கப்பட்ட ISO 9001:2015 தரச்சான்றுதழ்களை இன்று (04.03.2024) வாலாஜாபாத் மற்றும் குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட  வள்ளுவப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட குன்றத்தூர்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அய்யப்பன்தாங்கல் அரசு உயர்நிலைப் பள்ளி சத்துணவு மையங்கள் எரிவாயு, மின்சாரம் மற்றும் பாதுகாப்பான குடிநீர் இணைப்புகள் மற்றும் சுவர்கள் வண்ணம் பூசப்பட்ட நிலையில் உள்காற்று வெளியில் செல்லும் வகையில் வெளியேற்றும் விசிறி அமைக்கப்பட்டிருத்தல் போன்ற 25 பொதுவான நடைமுறைகளை பூர்த்தி செய்து ஐந்து நட்சத்திரம் (Five Star) குறியீடு பெற்றதால் ISO 9001 : 2015 தரச்சான்றிதழ் 3 சத்துணவு மையங்களுக்கு வழங்கப்பட்டது.   

சத்துணவு மையங்களுக்கு வழங்கப்பட்ட ISO 9001:2015 தரச்சான்றுதழ்களை வாலாஜாபாத் மற்றும் குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) திரு.ஜெ.ஜெகதீசன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments