சத்துணவுப் பணியாளர்கள் இருவர் இடைநீக்கம்
காஞ்சிபுரம், மார்ச் 5:
வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட கோவிந்தவாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி மாணவர்களுக்கு சத்துணவை கரண்டியில் வழங்காமல் கையில் சத்துணவு அமைப்பாளர் பரிமாறியுள்ளார்.
மாணவர்களும் சத்துணவை கையில் வாங்கியுள்ளனர். முட்டை சரியாக வேக வைக்காமலும், சத்துணவு தரமற்ற முறையிலும் சமைத்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையலர் இருவரையும் தற்காலிக பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

No comments
Thank you for your comments