1647 பயனாளிகளுக்கு ரூ.51,20,74,387/- மதிப்பிலான வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார் அமைச்சர் அன்பரசன்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் பட்டா வழங்கும் நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், 1647 பயனாளிகளுக்கு ரூ.51,20,74,387/- மதிப்பிலான வீட்டுமனைப் பட்டாக்களை மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்கள் வழங்கினார்கள்.
மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மூன்று இடங்களில் பட்டா சிறப்பு முகாம் நடத்திட தமிழக அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, பல ஆண்டுகளாக அரசு நிலங்களில் வீடுகளைக் கட்டி குடியிருப்போருக்கு ஒருமுறை வரன்முறை செய்யும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டாக்களில், சில கிராமக்கணக்கில் பதிவு செய்யப்படாமல் விடுபட்டுள்ளதை கிராமக் கணக்குகளில் உரிய திருத்தங்கள் செய்து பட்டா வழங்கக்கோரிய பொதுமக்களின் கோரிக்கையை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம், உத்திரமேரூர், வாலாஜாபாத், திருப்பெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் ஆகிய 5 வட்டங்களில் பல்வேறு அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருந்த 5288 பயனாளிகளுக்கு பட்டா வழங்கப்பட்ட கோப்புகள் கண்டெடுக்கப்பட்டு, அவை கிராமக்கணக்கு மற்றும் கணினி மயமாக்கப்பட்ட நத்தம் தரவுகளிலும் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக திருப்பெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் வட்டத்திற்குட்பட்ட கிராமங்களில் 2049 பட்டாக்கள் உட்பட மொத்தம் 3008 பட்டாக்கள் 28.11.2023 அன்று மாண்புமிகு அமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உத்திரமேரூர் வட்டத்திலும் இரண்டாவது பட்டா வழங்கும் சிறப்பு முகாமில் 2249 பயனாளிகளுக்கு ரூ.18,91,76,382/- மதிப்பிலான பட்டாக்களும் வழங்கப்பட்டன.
இதனை தொடர்ந்து 1647 பயனாளிகளுக்கு ரூ.51,20,74,387/- மதிப்பிலான வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கூட்டுறவுத் துறை சார்பில், 91 மகளிர் சுய உதவிக்குழுவில் உள்ள 1183 பயனாளிகளுக்கு ரூ.8,01,82,200/- மதிப்பிலான மகளிர் சுய உதவிக்கடன் உதவிகளும்,
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில், முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் மூலம் 24 பயனாளிகளுக்கு ரூ.3,35,000/- தொகையில் நலத்திட்ட உதவிகள் காசோலையாகவும், கிறித்துவ மகளிர் உதவும் சங்கம் மூலம் 63 பயனாளிகளுக்கு ரூ.9,90,000/- தொகையில் நலத்திட்ட உதவிகள் காசோலையாகவும்,
சிறுபான்மையினத்தைச் சேர்ந்த 28 மகளிருக்கு ரூ.1,65,200/- மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்களும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், 33 பயனாளிகளுக்கு ரூ.2,44,832/- மதிப்பிலான தையல் இயந்திரங்களும், 11 பயனாளிகளுக்கு ரூ.2,75,000/-மதிப்பிலான தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவிகளும், ஆக மொத்தம் இன்று
2989 பயனாளிகளுக்கு சுமார் ரூ.59.43 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மேலும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறைக்கு ரூ. 21 இலட்சம் மதிப்பீட்டில் சிறுகாவேரிப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்புக் கட்டடம்,
ரூ. 21 இலட்சம் மதிப்பீட்டில் சிட்டியம்பாக்கம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்புக் கட்டடம் மற்றும் ரூ. 42.41 இலட்சம் மதிப்பீட்டில் காஞ்சிபுரம் மாநகராட்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் மற்றும் குடியிருப்புக் கட்டடத்தையும், பொது நூலகத்துறைக்கு
ரூ. 35 இலட்சம் மதிப்பீட்டில் திருப்புக்குழி ஊர்ப்புற நூலகக் கட்டடத்தையும், கூட்டுறவுத் துறை சார்பில், ரூ. 66.49 இலட்சம் மதிப்பீட்டில் கொளப்பாக்கம் நகர கூட்டுறவு கடன் சங்கம் லிட் புதிய அலுவலக கட்டடத்தையும் மற்றும் ரூ. 59 இலட்சம் மதிப்பீட்டில் அய்யப்பன்தாங்கல் நகர கூட்டுறவு கடன் சங்கம் லிட் புதிய அலுவலக கட்டடத்தையும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், ரூ.39.85 இலட்சம் மதிப்பீட்டில் எடையார்பாக்கம் துணை வேளாண் விரிவாக்க மைய கட்டடத்தையும், திருப்பெரும்புதூர் வட்டம், ஒரகடத்தில் அமைக்கப்பட்ட தீயணைப்பு மீட்பு துறை சார்பில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையத்தினையும், ஆக மொத்தம்
ரூ.2,84,75,000/- (இரண்டு கோடியே எண்பத்து நான்கு இலட்சத்து எழுபத்தைந்தாயிரம் மட்டும்) மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களுக்கான கல்வெட்டினையும் திறந்து வைக்கப்பட்டன என மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.க.செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் திருமதி.எம்.மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், மாநகராட்சி துணை மேயர் திரு.குமரகுருநாதன், மாவட்ட ஊராட்சி குழுத் துணைத்தலைவர் திருமதி.நித்தியா சுகுமார், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத் தலைவர் திருமதி.மலர்க்கொடி குமார், வாலாஜாபாத் ஒன்றியக் குழுத் தலைவர் திரு.ஆர்.கே.தேவேந்திரன், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.மு.கலைவாணி, திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.ஜ.சரவணக்கண்ணன், கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் திருமதி.பா.ஜெயஸ்ரீ, உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments