Breaking News

காஞ்சிபுரம் தலைமை அஞ்சலகத்தில் பணியிட பயிற்சி மையம் திறப்பு விழா

காஞ்சிபுரம் பிப் 22:

காஞ்சிபுரத்தில் உள்ள தலைமை அஞ்சலகத்தில் புதிய பணியிட பயிற்சி மையத்தை அஞ்சல் துறை தலைமை இயக்குனர்  த ஸ்மிதா குமார் தலைமை தாங்கி   திறந்து வைத்தார்.

தமிழ்நாடு வட்ட அஞ்சல் துறை தலைவர்  ஸ்ரீதேவி,   சென்னை அஞ்சல் துறை தலைவர் நடராஜன்,  சென்னை நகர மண்டலம் மேஜர் மனோஜ், காஞ்சிபுரம் கோட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் கே.அருள்தாஸ், ஆகியோர் இந்நிகழ்ச்சியில் உடனிருந்தனர் .

 மேலும் இந்த  நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் நகரம் திருக்கோயில்களுக்காக புகழ் பெற்று விளங்குவதால், இப்பயிற்சி மையத்தில் பட்டுப்புடவைகள், நெசவாளர்களின் உருவப்படங்கள், வண்ணப்படங்கள் போன்ற கலை உணர்வுடன் நகரின் பாரம்பரிய கலாச்சார உணர்வுடன் கூடிய உட்புற அலங்காரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் தலைமை அஞ்சலகத்தில் ஒரு புதிய பணியிட பயிற்சி மையத்தை  துவக்கி வைத்துள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் மேம்படுத்தப்பட்டு வரும் தங்கள் துறையில் உள்ள சமீபத்திய தொழில்நுட்ப மற்றும் சேவை சார்ந்த முன்னேற்றங்கள் குறித்த அறிவை தங்கள் ஊழியர்களுக்கு வழங்குவதற்காக இது செயல்படுகிறது. 

மேலும்,  மென்திறன்களை மேம்படுத்துவதன் மூலமும், தொடர் கற்றலை ஊக்குவிப்பதன் மூலமும் அவர்களை தொழில் ரீதியாக திறனுள்ளவர்களாக மாற்றப்படுகிறார்கள். தற்போது சென்னை மண்டலத்தின் கட்டுப்பாட்டின் கீழ்  பணியிட பயிற்சி மையங்கள் சென்னை பொது அஞ்சலகம், வேலூர் தலைமை அஞ்சலகம், போளூர் அஞ்சல் அலுவலகம் மற்றும் முதலியார்பேட்டை அஞ்சல் ஆகிய இடங்களில் இயங்கி வருகின்றன.

அந்தவகையில் காஞ்சிபுரம் மற்றும் அரக்கோணம் அஞ்சல் கோட்ட ஊழியர்களுக்கு அருகில் பணியிட பயிற்சி மையம் இல்லாததால்,  வேலூர் அல்லது சென்னை பொது அஞ்சலகம் வரை பயணம் செய்து பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. 

இனிமேல், காஞ்சிபுரம் மற்றும் அரக்கோணம் அஞ்சல் கோட்டங்களைச் சேர்ந்த சுமார் 1600 பணியாளர்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ள இப்பணியிட பயிற்சி மையத்தின் மூலம் பயன்பெற அமைக்கப்பட்டுள்ளது

No comments

Thank you for your comments