காஞ்சிபுரம் ஸ்ரீ அஷ்டபுஜப் பெருமாள் கோயிலில் மகா சம்ப்ரோஷணம்
காஞ்சிபுரம், பிப்.26:
கஜேந்திர மோட்சம் நடைபெற்றது,காஞ்சிபுரத்தில் பரமபத வாசல் உள்ள ஓரே கோயிலாகவும்,108 வைணவக் கோயில்களில் பெருமாள் 8 திருக்கரங்களுடன் அருள்பாலிக்கும் பெருமைக்கும் உரியது புஷ்பவல்லித்தாயார் சமேத அஷ்டபுஜப் பெருமாள் கோயில்.இக்கோயில் மகா சம்ப்ரோஷணத்தையொட்டி யாகசாலை பூஜைகள் நிகழ் மாதம் 23 ஆம் தேதி தொடங்கியது.
இதனைத் தொடந்து 26 ஆம் தேதி திங்கள்கிழமை மகா பூர்ணாகுதி தீபாராதனை நிறைவு பெற்று புனிதநீர்க்குடங்கள் பட்டாச்சாரியார்களால் மங்கல மேள வாத்தியங்களுடன் ஆலயத்துக்குள் ஊர்வலமாக எடுத்து சென்று கோபுரங்களை அடைந்ததும் மகா சம்ப்ரோஷணம் நடைபெற்றது.
மகா சம்ப்ரோஷணத்திற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலர் குழுவின் தலைவர் எஸ்கேபிஎஸ்.சந்தோஷ்குமார் தலைமையில் அறங்காவலர்கள், மாமன்ற உறுப்பினர் எஸ்.கே.பி.கார்த்திக்,கோயில் செயல் அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் செய்திருந்தனர்.
விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு, மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல், மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெ"ங்கடேஷ், உத்தரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர்,அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் மனைவி சாந்தி, கச்சபேசுவரர் கோயில் திருப்பணிக்குழுவின் செயலாளர் சுப்பராயன், சமூக சேவகர் நடராஜன், மாநகர் மண்டலக்குழுவின் தலைவர் சாந்தி சீனிவாசன், அறநிலையத்துறை உதவி ஆணையர் லட்சுமி காந்தன்பாரதி, செயல் அலுவலர்கள் ந.தியாகராஜன்,செந்தில்குமார் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
பல்வேறு அமைப்புகள் சார்பில் ஆலயத்துக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கினார்கள்.மகா சம்ப்ரோஷணத்தையொட்டி இரவு சுவாமி வீதியுலாவும் நடைபெற்றது.
No comments
Thank you for your comments