Breaking News

காஞ்சிபுரத்தில் வருவாய்த்துறையினர் உண்ணாவிரதம்

காஞ்சிபுரம், பிப்.13:

காஞ்சிபுரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவட்ட தலைவர் எஸ்.மகாலிங்கம் தலைமை வகித்தார்.செயலாளர் நவீன்குமார், பொருளாளர் கோவர்தனன், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் லெனின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்துதல்,மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்குதல்,காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

 

No comments

Thank you for your comments