Breaking News

12.02.2024 தேதி அன்று மகளிர் தொழில் முனைவோரை கண்டறியும் முகாம்

காஞ்சிபுரம் :

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் மகளிர் தொழில் முனைவோர்  தங்கள் தொழில்களில் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தேவையான மேற்கண்ட அனைத்து உயர்தர சேவைகளையும் ஒரே நிலையத்தில் பெற, தகுதியான மகளிர் தொழில் முனைவோர்களை அடையாளம் கண்டு தேர்வு செய்யும் முகாம் வருகின்ற 12.02.2024 தேதி திங்கட்கிழமை  அன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்திலுள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் சார்பில் நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளதாவது, 

தமிழ்நாடு அரசின் முன்னோடி திட்டமான "வாழ்ந்து காட்டுவோம் திட்டமானது" ஊரக மகளிரின் தொழில் முனைவுகளை மேம்படுத்தவும், நிதி சேவை, வேலைவாய்ப்பு உருவாக்குதல் மற்றும் பிற தொழில் சேவைகளையும் வழங்கி வருகிறது. நமது காஞ்சிபுரம் மாவட்டத்தில் இத்திட்டமானது 2 வட்டாரங்களில் 101 கிராமங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நமது மாவட்டத்தில் உள்ள புதிய மற்றும் ஏற்கனவே தொழில் செய்து வரும் தொழில் முனைவோருக்கு தேவையான தொழில் பதிவு, தொழில் திட்டம் தயார் செய்தல், வங்கிக் கடன் பெற்று தருதல் ஆகிய அடிப்படை தொழில் சேவைகளை “மதி சிறகுகள் தொழில் மையம்” மூலமாக தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் வழங்கி வருகிறது.

தொழில் நிறுவன வளர்ச்சியின்  அளவு பெரிதாக, பெரிதாக தொழில் நிறுவனத்தை வெற்றிகரமாக நிலை நிறுத்த இன்னும் பல சிறப்பான சேவைகள் தொழில் முனைவோருக்கு தேவைப்படுகிறது,  உதாரணமாக மார்க்கெட்டிங், பிராண்டிங், பேக்கேஜிங், சந்தை இணைப்புகள், ஏற்றுமதி, இறக்குமதி தர நிலைப்படுத்துதல், தொழில்நுட்பம், இயந்திரமயமாக்கல், தொழில் சார்ந்த புதுமை யுக்திகள், நிதி சேவைகள் போன்ற சேவைகள்.  இத்தகைய சேவைகள் பெரும்பாலும் மகளிர் தொழில் முனைவோருக்கு குறிப்பாக  கிராமப்புற மகளிர் தொழில் முனைவோருக்கு எளிதில் கிடைப்பதில்லை. மேற்கண்ட சிறப்பான சேவைகளை பெற பெண்கள் பல்வேறு சமூக பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் மகளிர் தொழில் முனைவோர்  தங்கள் தொழில்களில் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தேவையான மேற்கண்ட அனைத்து உயர்தர சேவைகளையும் ஒரே நிலையத்தில் பெற, தகுதியான மகளிர் தொழில் முனைவோர்களை அடையாளம் கண்டு தேர்வு செய்யும் முகாம் வருகின்ற 12.02.2024 தேதி திங்கட்கிழமை  அன்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்திலுள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கத்தில் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டத்தின் சார்பில் நடைபெறுகிறது

ஆகவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் புத்தொழில் நிறுவனங்களை துவக்கும் ஆர்வமும், யுக்தியும், திறமையும் கொண்ட புதிய மகளிர் தொழில் முனைவோர்களும் ஏற்கனவே தொழில் நிறுவனங்களை துவக்கி வெற்றிகரமாக நடத்தி அடுத்தகட்ட வளர்ச்சியை எதிர்நோக்கி காத்திருக்கும் மகளிர் தொழில் முனைவோர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்களின்  தொழில் கனவுகளை அடைய மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அன்புடன் அழைக்கின்றேன். தொழில்முனைவோர் அனைவரும் தவறாமல் இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெறவும்.

இம்முகாம் பற்றிய மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்ட மாவட்ட செயல் அலுவலர் திரு க.இ.ஆரோன் ஜோஷ்வா ரூஸ்வெல்ட் அவர்களை 9952467424 என்ற தொலைபேசி வாயிலாகவோ அல்லது, மாவட்ட ஆட்சியர் வளாகம், மகளிர் திட்ட கட்டிடத்தில் இயங்கி வரும் மதி சிறகுகள் தொழில் மையத்தில் நேரிலோ தொடர்புகொண்டு அறிந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ள 12.02.2024 தேதிக்கு முன்பாக கட்டாயம் பதிவு செய்து கொள்ளவும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

வெளியீடு:  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments