காஞ்சிபுரத்தில் கல்விக்கடன் முகாம் - ரூ.4.81 கோடி மதிப்பில் கல்விக் கடனுதவிகள்
ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இணையதளம் மூலமாக கல்விக் கடன் பெற மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள "Vidhyalakshmi Portal" (www.vidhyalakshmi.co.in) குறித்து மாணவர்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "Education Loan Mela" நடத்திட வேண்டும் என தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்ட அமலாக்கத்துறை மூலமாக அறிவுரைகள் பெறப்பட்டன.
இதனைத் தொடர்ந்து அனைத்து கல்லூரிகளின் ஒருங்கிணைப்பாளர்களை அழைத்து "Vidhyalakshmi Portal" குறித்த பதிவுமுறைகளை எடுத்துரைத்ததோடு அனைத்து மாவட்ட நிலை அலுவலர்கள் மூலம் ஒவ்வொரு கல்லூரிகளுக்கும் சென்று "Vidhyalakshmi Portal" குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கடந்த 22.11.2023 அன்று மாண்புமிகு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், பென்னலூர் கிராமத்தில் அமைந்துள்ள Sri Venkateshwara College of Engineering-ல் நடைபெற்ற "Education Loan Mela" விழாவில் சுமார் 112 மாணவ / மாணவியர்களுக்கு ரூ.13.19 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்திய மாபெரும் கல்வி கடன் முகாமில் 60 மாணவ/மாணவியர்களுக்கு சுமார் ரூ. 4.81 கோடி மதிப்பிலான கல்வி கடனுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் வழங்கினார்கள்.
இம்முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் திருமதி.மலர்க்கொடி குமார், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் திரு.A.ராஜராமன், தலைமை பிராந்திய மேலாளர் (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி) திரு.சிக்கிரிலால், V.L., முன்னோடி வங்கி மேலாளர் திரு.அ.திலீப், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், முன்னோடி வங்கி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், மாணவ/மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.
No comments
Thank you for your comments