காஞ்சிபுரத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்,மாற்றுத் திறனாளிகள் இருவருக்கு 3 சக்கர சைக்கிள் வழங்கினார் ஆட்சியர் கலைசெல்வி மோகன்
காஞ்சிபுரம் ,பிப்.19:
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவுக் கூட்ட மையத்தில் ஆட்சியர் கலைச்செல்வி மோகன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்துக்கு ஆட்சியர் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து மொத்தம் 419 கோரிக்கை மனுக்களை பெற்று அவை துறை சார்ந்த அலுவலர்களுக்கு உரிய தீர்வு காணுமாறு ஆட்சியர் பரிந்துரை செய்தார்.இதன் தொடர்ச்சியாக இரு மாற்றுத் திறனாளிகளுக்கு மொத்தம் ரூ.19,200 மதிப்புள்ள 3 சக்கர சைக்கிள்களையும் ஆட்சியர் வழங்கினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ்,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் ரா.மலர்விழி ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள்,பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments