Breaking News

சாலையோர வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள்

கோவை :

கோவை மாவட்டம், காரமடை நகராட்சி பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி மூலம் அறிவிக்கப்பட்ட பா.ஜ.க. மத்திய அரசின் திட்டங்களில் ஒன்றான "தீனதயாள் அந்தியோதயா யோஜனா" திட்டத்தின் கீழ் வியாபார தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டது. 


இதனை காரமடை நகர மன்ற தலைவர் உஷா வெங்கடேஷ் வழங்கினார். நிகழ்ச்சியில் கோவை வடக்கு மாவட்ட பா.ஜ.க. மத்திய அரசு நலத்திட்டங்கள் பிரிவு தலைவர் ராகவன், நகரமைப்பு திட்டமிடல் ஆய்வாளர் பழனிச்சாமி, வார்டு உறுப்பினர்கள் இருந்தனர்.  இவர்களுக்கு  நகர மன்ற உறுப்பினர் ஆர்.விக்னேஷ் பரிந்துரைத்தார். மேலும் பயன்பெற்றோர் பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்கள்.



No comments

Thank you for your comments