Breaking News

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் ஜனவரி 8ஆம் தேதி நடக்கிறது.

108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கம் சார்பில் வேலை நிறுத்தம் போராட்டம் அறிவிப்பு தொடர்பான கூட்டம் கோவை மாவட்ட  போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே தாமஸ் கிளப்பில் மாவட்ட தலைவர் சிவசாமி தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் பாலாஜி, மண்டல செயலாளர் சரவணகுமார், மாநில செயலாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர், மாநில பொருளாளர் சாமுவேல் துணைப் பொதுச் செயலாளர் ஜெகதீசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார். அதனைத் தொடர்ந்து மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன் தெரிவித்ததாவது.

மாநிலம் முழுவதும் ஆம்புலன்ஸ் சேவை செய்யும் தனியார் நிறுவனம் ஆட்கள் பற்றாக்குறையை காரணம் காட்டி வார விடுமுறை நாட்களில் ஆம்புலன்ஸ் வாகனத்தை இயக்காமல் உள்ளது ஆனால் ஆம்புலன்ஸ் சேவை தங்கு தடையின்றி நடைபெற வேண்டும் ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை வழங்க வேண்டும் கொரோனாவுக்கு பிறகு சேவையிலிருந்து நீக்கிய ஆம்புலன்ஸ்களை மீண்டும் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் ஜனவரி 8ஆம் தேதி தமிழக முழுவதும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் மேலும் இதற்கு ஆதரவு திரட்ட கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளோம் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண தமிழக அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தெரிவித்தார்.

No comments

Thank you for your comments