Breaking News

காவலர் வீர வணக்க நாளில் உயிரிழந்த 189 வீரர்களுக்கு அறுபது குண்டுகள் முழங்க எஸ்.பி சுதாகர் தலைமையில் அஞ்சலி

காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில், காவலர் வீர வணக்க நாளில்  இந்த ஆண்டு உயிரிழந்த 189  வீரர்களுக்கு அறுபது குண்டுகள் முழங்க எஸ்.பி சுதாகர் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.


ஆண்டுதோறும் அக்டோபர் 21ஆம் நாள் காவலர் வீரவணக்க நாள் நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.

கடந்த 1959 ஆம் ஆண்டு இதே நாளில் லடாக் பகுதியில் ஆட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில்,  பத்து மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர்.

கடல் மட்டத்திலிருந்து 16,000 அடி உயரத்தில் அன்று வீரம் அடைந்த காவலர்களின் தியாகத்தை கடல் அலைகள் கண்ணுக்கு தெரியும் இவ்விடத்திலிருந்து நினைவுக் கொள்ளும் வகையில் இந்நிகழ்வு அனுசரிக்கப்படுகிறது.

மேலும் வருங்காலத்திற்கு எனது தற்காலத்தை ஈந்தேன் நாளை உன் விடியலுக்கு இன்று நான் மடிய தயார் என்று கூறி இவ்வாறு இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் நம்மை விட்டு பிரிந்த 189 காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் ஆயுதப்படை மைதானத்தில் எஸ்பி சுதாகர் தலைமையில் மலர்வளையம் வைத்து உயிர் நீத்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து  20 ஆயுத படை மூன்று முறையில் 60 குண்டுகள் முழங்கி காவலர்களுக்கு வீர வணக்கம் செலுத்தினர் .

இந்நிகழ்வில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளைதுரை , டிஎஸ்பி , ஆய்வாளர்கள் , அனைத்து பிரிவு  காவல்துறையினர் என பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் ஓய்வு பெற்ற முன்னாள் காவல்துறை சங்கத்தின் சார்பில் உயிர் நீத்த வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

No comments

Thank you for your comments