Breaking News

காஞ்சிபுரத்தில் மாவட்ட வளர்ச்சிக்கான கண்காணிப்புக் குழு கூட்டம் - டி.ஆர்.பாலு எம்.பி தலைமையில் நடைபெற்றது.

படவிளக்கம் : காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சிப் பணிகள் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டத்தில் பேசுகிறார் ஸ்ரீபெரும்புதூர் எம்பி டி.ஆர்.பாலு (உடன் )அமைச்சர் தா.மோ.அன்பரசன்


காஞ்சிபுரம்,செப்.26:

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட வளர்ச்சிக்கான ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில் மாவட்டததில் நடந்து வரும் வளர்ச்சிப் பணிகள் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற்றது.


கூட்டத்திற்கு கண்காணிப்புக் குழுவின் தலைவரும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை உறுப்பினருமான டி.ஆர்.பாலு தலைமை வகித்தார்.குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலை வகித்தார்.ஆட்சியர் கலைச்செல்வி மோகன் வரவேற்று பேசினார்.இக்கூட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளில் நடந்து வரும் வளர்ச்சிப்பணிகள் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடைபெறுகிறதா என்பது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

முடிக்கப்படாத பணிகளாக இருந்தால் உரிய காலத்தில் முடிக்குமாறும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் எம்பி க.செல்வம், எம்எல்ஏ க்கள் க.சுந்தர், எழிலரசன், எஸ்.ஆர்.ராஜா, மாவட்ட ஊராட்சித்தலைவர் படப்பை ஆ.மனோகரன், மாவட்ட எஸ்பி.எம்.சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் செல்வக்குமார், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் நித்யா சுகுமார் ஆகியோர் உட்பட உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.








No comments

Thank you for your comments