காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் விபத்தில் பலி
சென்னை, செப்.26-
காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவர் விபத்தில் பலியானார்.
மாவட்ட தலைவர்
சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் துறை சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் நாகராஜ், நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பும் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதிர்ச்சி
இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், வாலாஜாபாத் ஒன்றிய கவுன்சிலருமான திரு அளவூர் வி.நாகராஜ் அவர்கள் மறைவையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கே.எஸ்.அழகிரி அவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். pic.twitter.com/kzCWZOYtUq
— K.S.ALAGIRI (@KS_Alagiri) September 26, 2023
No comments
Thank you for your comments