கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி மரம் நடும் விழா
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் திராவிட மாடல் நல்லாட்சியில், தமிழின தலைவர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம், விசூர் ஊராட்சியில் தமிழ்நாடு வனத்துறை சார்பாக, பசுமை தமிழக தின மரம் நடும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு வருகை தந்து காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.க.சுந்தர் Bsc,MLA தலைமையேற்று சிறப்பித்தார்.
மாவட்ட துணை செயலாளர், காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் திரு.க.செல்வம் Mcom,Mphil,llb, உத்திரமேரூர் ஒன்றிய கழக செயலாளர்,ஓன்றிய குழு உறுப்பினர் மரியாதைக்குரிய திரு.கெ.ஞானசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினர் திரு.இரா.நாகன், உத்திரமேரூர் பேரூராட்சி செயலாளர் திரு.என்.எஸ்.பாரிவள்ளல், உத்திரமேரூர் பேரூராட்சி மன்ற தலைவர், பொதுக்குழு உறுப்பினர் திரு.பொ.சசிகுமார் DME, உத்திரமேரூர் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் திருமதி.இளமதிகோவிந்தராஜ் மற்றும் உத்திரமேரூர் ஒன்றிய, பேரூர் கழக நிர்வாகிகள் மற்றும் அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள்,விசூர் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்,
இந்நிகழ்ச்சியை சிறப்பித்தவர்களுக்கு அ.சண்முகம்DCE,BE, உத்திரமேரூர் ஒன்றிய கழக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்(களப்பணி) நன்றி தெரிவித்தார்.
.jpg)



No comments
Thank you for your comments