இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் ட்ரோன் கேமராக்கள் பறக்க தடை
காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் மாநகரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியைச் சுற்றியுள்ள சுற்று வட்டார பகுதிகளில் ட்ரோன் கேமராக்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன் தகவல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் இன்று (15.09.2023) பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்கும் விழா நடைபெறவுள்ளதையொட்டி காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் மாநகரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரியைச் சுற்றியுள்ள சுற்று வட்டார பகுதிகளில் ட்ரோன் கேமராக்கள் பறக்க தடைவிதிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்கள்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments
Thank you for your comments