முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் சிற்றுண்டி... மாணவர்களுடன் அமர்ந்து உணவு உண்ட ஆட்சியர், எஸ்பி
காஞ்சிபுரம் மாவட்டம், தும்பவனம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு வழங்கப்படும் சிற்றுண்டியினை இன்று (22.08.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களுடன் அமர்ந்து உணவு உண்டார்கள்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ், அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை வேளையில் 5 நாட்களிலும் வெவ்வேறு வகையான சிற்றுண்டிகள் 37 பள்ளிகளில், 3579 மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.
திங்கள் கிழமை ரவா உப்புமா, சாம்பாரும், செவ்வாய் கிழமை சோள காய்கறி கிச்சடியும், வெண்பொங்கல் சாம்பாரும், வியாழன் கிழமை அரிசி உப்புமா, சாம்பாரும், வெள்ளி கிழமை கோதுமை ரவா கிச்சடி அல்லது ரவா கேசரியும் என ஒவ்வொரு பள்ளி நாட்களிலும் சுழற்சி முறையில் வெவ்வேறு வகையான சிற்றுண்டி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படுகின்றது.
இதன் தொடர் நிகழ்வாக இன்று தும்பவனம் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு வழங்கப்படும் சிற்றுண்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களுடன் அமர்ந்து உணவு உண்டார்கள்.
இவ் ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.சுதாகர், காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையாளர் திரு.க.கண்ணன் உடன் இருந்தனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments