Breaking News

கடன் தொல்லையால் நகை கடையில் திருடிய இளம்பெண்...!

 காஞ்சிபுரம்



காஞ்சிபுரம் வள்ளல் பச்சையப்பன் தெரு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நகைக்கடை ஒன்றில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நகை வாங்குவது போல வந்த டிப் டாப் உடை அணிந்த பெண் நகைக்கடை பணியாளர்களின் கவனத்தை திசை திருப்பி விட்டுவிட்டு இரண்டு தங்க செயின்களை  திருடிக் கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

இது குறித்து தனியார் நகைக்கடை உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விஷ்ணு காஞ்சி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர் மேலும் நகைக்கடையில் பதிவாகியிருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி டிப்டாப் பெண்மணியை தீவிரமாக தேடி வந்தனர்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு தேடியதில் வாலாஜாபாத் தாலுக்கா புளியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த காயத்திரி வயது இருபத்தி ஆறு என்ற இளம் பெண் என்பது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து காயத்ரியை விஷ்ணு காஞ்சி போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் தீவிர விசாரணையில் காயத்ரிக்கு கடன் கொடுத்தவர்கள் கடனை கேட்டு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த நிலையில், வாங்கிய கடனை எப்படியாவது திருப்பி செலுத்தி விட வேண்டும் என நினைத்து, காஞ்சிபுரம் நகைக்கடையில் செயின்களை திருடி சென்றதாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து விஷ்ணு காஞ்சி போலீசார் இரண்டு தங்க செயின்களை பறிமுதல் செய்து கொண்டு காயத்திரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

No comments

Thank you for your comments