Breaking News

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா ஆட்சிமொழிக் கருத்தரங்கம்

காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், உத்திரமேரூரில்  முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா ஆட்சிமொழிக் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி, துவக்கி வைத்தார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், உத்திரமேரூர் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அரசு கலைக் கல்லூரியில், இன்று (02.08.2023) முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா ஆட்சிமொழிக் கருத்தரங்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் குத்துவிளக்கேற்றி, துவக்கி வைத்து பேசியதாவது:

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், பள்ளி கல்லூரி மாணவர்களுக்கிடையே கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் இவ்வாண்டு சென்னையில் நடைபெற்ற மாநிலப் போட்டியில் காஞ்சிபுரம் மாவட்டத்தை  சார்ந்த  மருத்துவக்  கல்லூரி  மாணவி வா. இலக்கியா முதல் பரிசு வென்றார் என்பது நம் மாவட்டத்தின் சிறப்பு. ஒவ்வொரு ஆண்டும் ஜ~லை 18-ஆம் நாள் தமிழ்நாடு நாள் விழாவாக தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.  

அவ்வகையில் இவ்வாண்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறை, பள்ளிக் கல்வித் துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், பள்ளி மாணவர்களிடையே நடத்தப்பெற்ற  கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஜ~லை 18 அன்று நடத்தப்பெற்ற பேரணி மற்றும் புகைப்படக் கண்காட்சியில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப் பெற்றனர். 

ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளினை அரசு விழாவாக தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 07 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.   இவ்விழாவில் ஆட்சிமொழிச் சட்டத்தினை நிறைவேற்றும் வகையில் கருத்தரங்கம், அரசுப் பணியாளர்களுக்கு வரைவுகள் குறிப்புகள் எழுதுவதற்கான பயிற்சி, தமிழில் கையொப்பமிடுதல், வணிக நிறுவனப் பெயர் பலகை தமிழில் அமைத்தல் குறித்து வணிகர் சங்க நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி, மாணவர்களை கொண்டு பேரணி போன்றவை நடத்தி ஆட்சிமொழிச் சட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


இதன் தொடர்ச்சியாக இவ்வாண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா தமிழ்நாடு முழுவதும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அன்னாரை நினைவு கூறும் வகையில் கலைஞர் நூற்றாண்டு விழா ஆட்சிமொழிக் கருத்தரங்கம் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது. ஆகவே மாணவர்கள் இவ்வாறான கருத்தரங்குகளை சரியான முறையில் பயன்படுத்தி, சொற்பொழிவாளர்களின் சொற்பொழிவுகளை கருத்தில் கொண்டு தங்கள் வாழ்வில் வெற்றி பெற வாழ்த்துகிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  தெரிவித்தார்கள்.

இக்கருத்தரங்கில் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர், மண்டல தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் திருமதி.க.பவானி, செங்கல்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசு கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் ப.கி.கிள்ளிவளவன், தமிழ் வளர்ச்சித் துறை மேனாள் இயக்குநர் திரு.கூ.வ.எழிலரசு, முனைவர் பா.கதிரவன், சொற்பொழிவாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ/மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம். 

No comments

Thank you for your comments