காஞ்சிபுரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க அதிகாரிகள் ஆய்வு
காஞ்சிபுரம், ஆக.1:
காஞ்சிபுரம் மாநகரில் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து தினசரி ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.இவர்கள் காஞ்சிபுரத்தில் பட்டுச் சேலைகள் வாங்கவும்,கோயில்களை தரிசிக்கவும் அதிகமானவர்கள் வருவதால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது.
இதனை தவிர்க்கும் பொருட்டு நகருக்குள் வாகனங்களை நிறுத்தி மீண்டும் எடுத்துச் செல்ல வசதியாக இருக்கும் வகையில், |காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட கோயில்களுக்கு அருகாமையில் உள்ள காலி இடங்களை வாகன நிறுத்தும் இடங்களாக அமைப்பதற்கான ஆய்வினை இன்று (01.08.2023) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் மேற்கொண்டார்கள்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட மேட்டுத் தெருவில் அமைந்துள்ள நகரீஸ்வரர் கோயில் அருகில், காமராஜர் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீசித்தீஸ்வரர் கோவில் அருகில் மற்றும் ஏகாம்பரநாதர் கோவில் தேவஸ்தானம் (யாத்ரி நிவாஸ்) ஆகிய இடங்களுக்கு அருகாமையில் உள்ள காலி இடங்களை வாகன நிறுத்தும் இடங்களாக அமைப்பதற்கான ஆய்வினை மேற்கொண்டார்கள்.
மேலும் உலகளந்த பெருமாள் கோவில் அருகில் உள்ள காலி இடங்களையும், விளக்குகொளி பெருமாள் கோவில் ஆகிய இடங்களுக்கு அருகாமையில் உள்ள காலி இடங்களை வாகன நிறுத்தும் இடங்களாக அமைப்பதற்கான ஆய்வினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மேற்கொண்டார்கள்.
இவ் ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.ச.ரம்யா, காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையாளர்.திரு.க.கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
No comments
Thank you for your comments