அங்கம்பாக்கம் பள்ளியில் அறிவியல் கழகம் சார்பில் சந்திராயன் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வை நேரலை
இன்று எங்கள் அங்கம்பாக்கம் பள்ளியில் சார்லஸ் டார்வின் அறிவியல் கழகம் சார்பில் சந்திராயன் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வை நேரலையில் காண ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
மாணவர்கள் சந்திராயன்-3 விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வை நேரலையில் கண்டு களித்து ஆரவாரம் செய்தனர்..
விக்ரம் லேண்டர் தரையிறங்கிய வெற்றியை கொண்டாடும் வகையில் கையொலி எழுப்பியும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்...
முன்னதாக சந்திராயன் 3 விண்கலத்தை தரை ஓவியமாக வரைந்து மகிழ்ந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் தி.சேகர் செய்திருந்தார்.
இந்நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் திரு.தி.தணிகை அரசு ஊராட்சி மன்ற தலைவர் திரு.து.ஏழுமலை, துணைத்தலைவர் திருமதி.ஜெயசுதா முருகேசன், ஆசிரியர்கள் திருமதி. குளோரி பாத்திமா திருமதி. S.லதா திரு.ம.சீனிவாசன் திரு. கலைவாணன் திருமதி. பொற்கொடி வார்டு உறுப்பினர் திரு.பாவலன் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்றனர்..
No comments
Thank you for your comments