ஆருத்ரா, ஐஎப்எஸ் வரிசையில் DAY BY DAY நிதி நிறுவன இயக்குநர்கள் இருவர் கைது
- காஞ்சிபுரத்தில் ஆருத்ரா, ஐஎப்எஸ் போன்றே DAY BY DAY என பெயர் வைத்து மோசடி செய்த நிதி நிறுவன இயக்குநர்கள் இருவர் கைது
- காஞ்சிபுரத்தில் நூற்றுக்கணக்கானவர்களிடமிருந்து ரூ. 24 கோடி ரூபாய் வரை மோசடி செய்துவிட்டு தலைமறைவாக இருந்த சீட்டிங் பேரொழிகள் கைது
- முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் பெயரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அமைந்துள்ள பங்காரு அம்மன் தோட்டம் தெரு பகுதியில் வாசுதேவன் மற்றும் சுரேஷ் என்பவர் இணைந்து டே பை டே (DAY BY DAY)எனும் நிதி நிறுவனத்தைத் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் துவங்கி கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்துள்ளனர்.
இதில் ஒரு லட்சம் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு 200 நாட்கள் நாள்தோறும் 1500 ரூபாய் விதம் பணம் அளிக்கப்படும் எனவும்,அந்த முதலீட்டாளர்களை அறிமுகப்படுத்தும் ஏஜெண்ட்களுக்கு நாள்தோறும் 500 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டும் இல்லாமல் முதலீட்டாளர்களை அறிமுகப்படுத்தும் நபருக்கு இரண்டு கிராம் தங்க நாணயம் வழங்குவதாகவும் ஆசை வார்த்தை கூறி காஞ்சிபுரத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட நபர்கள் இந்நிறுவனத்தில் சுமார் 24 கோடிக்கு மேல் முதலீடு செய்தாக கூறப்படுகிறது.
கடந்தாண்டு இந்த நிறுவனமானது திறக்கப்பட்டதாக சொல்லப்படும் நிலையில் ஆகஸ்ட் மாதம் வரை பணம் இரு தரப்பினருக்கும் வழங்கப்பட்டது.இதனையெடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அலுவலத்தையே காலி செய்துவிட்டு தலைமறைவாகினர்.
இதனையெடுத்து இந்த நிதி நிறுவனத்தால் ஏமாற்றமடைந்த முதலீட்டாளர் காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கூட்டாக நதி நிறுவனத்தில் பணம் செலுத்தியதற்கான ஆவணங்களுடன் புகார் அளித்திருந்தனர்.
மேலும் சிலர் காஞ்சிபுரம் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகாரும் தெரிவித்திருந்தனர். இந்த புகார்களின் அடிப்பைடையில் வழக்குப்பதிவு செய்த நிலையில் அதன் இயக்குநர்களான வாசுதேவன் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தேடிவந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பதுங்கியிருந்த வாசுதேவனை போலீசார் சுற்றுவளைத்து கைது செய்தனர்.
அதே போல் சுரேஷ் தனது சொந்த ஊரான வேலூர் மாவட்டம் பனபாக்கத்திற்கு வந்துகொண்டிருந்த போது பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்படார்.இருவரையும் விசாரணைக்கு உட்படுத்தி கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
No comments
Thank you for your comments