Breaking News

காஞ்சிபுரம் மாநகராட்சியில் வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர் தேர்தல்

  • காஞ்சிபுரம் மாநகராட்சியில் வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர் தேர்தலில் திமுக கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்றனர்.
  • அதிமுக கூட்டணி  கவுன்சிலர்கள் 16 பேர் தேர்தலை புறக்கணித்து பதாகைகளை ஏந்தி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால்  பரபரப்பு.



காஞ்சிபுரம் மாநகராட்சியில் வரிவிதிப்பு மேல் முறையீட்டு குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது.

வரிவிதிப்பு மேல் முறையீட்டு குழு தலைவராக மேயர் உள்ள நிலையில்  ஒன்பது பேர் கொண்ட உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவோர், ஓட்டெடுப்பு மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.

அதன்படி வரிவிதிப்பு மேல் முறையிட்டுக் குழு உறுப்பினர் பதவிக்கு மாமன்ற உறுப்பினர்கள் போட்டியிடலாம் என அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மாநகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் இன்று தேர்தல் நடைபெற்றது.

மாநகராட்சி உறுப்பினர்களின் மேயர் துணை மேயர் உட்பட 35 பேர் திமுக கூட்டணியில் உள்ளனர்.எதிர்கட்சி வரிசையில் அதிமுக பாஜக தமாக பாமக சேர்ந்த 16 பேர் மாமன்ற உறுப்பினர்களாக  உள்ளனர்.

எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர்களின் வார்டுகளில் மக்கள் நல பணிகளை  சரியாக செய்ய விடாமல் அதிகாரிகளும் மிரட்டுவதாகவும், மாமன்ற கூட்டத்தில் விவாதத்தில் கேள்வி எழுப்பும் போது  மேயர் பதிலளிக்காமல் அளிக்காமல் தட்டிக் கழித்து வருவதாகவும், இதை கண்டித்து  எதிர்ப்பு தெரிவித்து தேர்தலை புறக்கணித்து  பதாகைகளை கைகளில் ஏந்தி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்களை எழுப்பி வெளிநடப்பு செய்தனர்.

எதிர்க்கட்சிகள் தேர்தல் புறக்கணித்து வெளிநடப்பு செய்ததிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கவுன்சிலர்களும் கோஷங்கள் எழுப்பியதால்  மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர்  மாநகராட்சி ஆணையர் கண்ணன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் முன்னிலையில் வரிவிதிப்பு மேல்முறையீட்டு குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்தப்பட்டு மாமன்ற உறுப்பினர்கள் 9 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

மாநகராட்சி வரி விதிப்பு மேல்முறையீட்டு குழு தேர்தல் நடத்தப்பட்டு திமுக கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்றதை தொடர்ந்து பட்டாசு வெடித்து, வெற்றி கோஷமிட்டு கொண்டாடினார்கள்.

No comments

Thank you for your comments