காஞ்சிபுரத்தில் கிறிஸ்தவர்கள் பிஜேபி கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் :
பெந்தெகோஸ்தே மாமன்றம் சார்பில் பற்றி எரியும் மணிப்பூர் மாநில கிருஸ்துவர் மக்களுக்காகவும் வாழ்வாதாரத்தை காக்க, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சங்க நிர்வாகிகள் ஜோயல் கே சேகரன், அருள் தாஸ் சாமுவேல் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
கடன் செயலி (LOAN APP) மோசடி
டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை
இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில செயலாளர் வக்கீல் பார்வேந்தன், சி ஐ டி யு மாநில செயலாளர் முத்துக்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொகுதி செயலாளர் கமலநாதன் எஸ் டி பி ஐ மாவட்ட தலைவர் ஜாபர் ஷெரிப், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி லாரன்ஸ் காஞ்சிபுரம் மாவட்ட பொருளாளர் யூதா ஆகியோர் கலந்து கொண்டு கண்டித்து பேசினார்கள்.
மேலும் மணிப்பூர் கிறிஸ்தவர்களின் வாழ்வாதாரத்தை மணிப்பூர் அரசு உறுதிப்படுத்த வேண்டும், அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரியஉரிய நிவாரணம் வழங்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
No comments
Thank you for your comments