Breaking News

சவுதி அரேபியா அமைச்சகத்தில் பணிபுரிய பெண் செவிலியர்கள் அரிய வாய்ப்பு

சவுதி அரேபியா அமைச்சகத்தில் பணிபுரிய பெண் செவிலியர்கள் மற்றும் ஆண் / பெண் Perfusionists – க்கு ஓர் அரிய வாய்ப்பு விருப்பமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்.  

இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளதாவது, 

சவுதி அரேபியா அமைச்சகத்தில் பணிபுரிய ஆண்/பெண் Perfusionists –க்கு அரிய வாய்ப்பு தற்போது வந்துள்ளதாக, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், அவர்கள் தெரிவித்துள்ளார். சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்த பட்சம் இரண்டு வருட பணி அனுபவத்துடன் B.sc Nursing தேர்ச்சி பெற்ற 35 வயதிற்குட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.



கடன் செயலி (LOAN APP) மோசடி 

மேலும், Data Flow மற்றும் HRD சான்றிதழ்களில் சான்றொப்பம் பெற்றவர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும் மற்றும் சவுதி அரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு குறைந்தபட்சம் இரண்டு வருட பணி அனுபவத்துடன் Perfusionistsதேர்ச்சி பெற்ற 35 வயதிற்குட்பட்ட ஆண்/பெண் Perfusionists தேவைப்படுகிறார்கள். 

மேற்படி பணியாளர்களுக்கு உணவுப்படி, இருப்பிடம், விமான பயணச்சீட்டு ஆகியவை அந்நாட்டின் வேலை அளிப்பவரால் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிறுவனம் மூலமாக அளிக்கப்படும் வெளிநாட்டு வேலைகளுக்கான பணிகாலியிடங்கள் குறித்த விவரங்கள் இந்நிறுவன வலைதளமான www.omcmanpower.com-ல்  கண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்கள் பற்றிய விவரங்களை அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்களின் (9566239685, 6379179200,  044- 22505886 / 044- 22502267) வாயிலாக அறிந்து கொள்ளலாம். 

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் வழியாக ovemclmohsa2021@gmail.com சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பபடிவத்தை உடனடியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜென்ட்டுகளோ கிடையாது. விண்ணப்பதாரர்கள் நேரடியாக பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 

பதிவு மற்றும் பணி விவரங்களின் தகுதியைப் பொறுத்து முன்னுரிமை வழங்கப்படும், இந்தப் பணிக்கு தேர்வு பெறும் பணியாளர்களிடமிருந்து சேவைக் கட்டணமாக ரூ35,400/- மட்டும் வசூலிக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அவர்கள் தனது செய்திகுறிப்பில் குறிப்பிட்டுள்ளார் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

அதிகாரப்பூர்வ இணையதளம்

click here : https://www.omcmanpower.com/



No comments

Thank you for your comments