Breaking News

நாளை நீர்வள்ளுர் துணை மின் நிலையம் பகுதியில் மின் விநியோகம் தடை.... !

நீர்வள்ளுர் துணை மின் நிலையம் மின் சாதன பராமரிப்பு பணிகள் முன்னிட்டு மின் விநியோகம் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 

நீர்வள்ளுர் 110/33-11கே.வி துணை மின் நிலையம் மற்றும் பரந்தூர் 33/11 கே.வி துணை மின் நிலையங்களில் 14.07.2023 அன்று வெள்ளிக்கிழமை காலை 09:00 மணி முதல் பிற்பகல் 03:00 மணி வரை மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. 



கடன் செயலி (LOAN APP) மோசடி 

அந்த நேரத்தில் நீர்வள்ளுர் மற்றும் அதை சுற்றியுள்ள சில பகுதிகள் சின்னையன் சத்திரம், ராஜகுளம், கரூர், அத்திவாக்கம், நீர்வள்ளுர், தொடூர், மேல்மதுரமங்களம், சிங்கில்பாடி, கண்ணன்தாங்கல், குணகரம்பாக்கம், மதுரமங்களம், செல்வழிமங்களம், சிங்காடிவாக்கம், சின்னிவாக்கம், மருதம் ஆகிய கிராமங்களிலும், 

பரந்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள சில பகுதிகள் காரை, சிறுவாக்கம், ஆண்டிசிறுவள்ளுர், நாகப்பட்டு, ஏகனாபுரம், கொட்டவாக்கம், எடையார்பாளையம், செல்லம்பட்டிடை, கோட்டூர், எலுமயன் கோட்டூர், பிச்சிவாக்கம், துளசாபுரம், கண்டிவாக்கம், 144 தண்டலம், நெல்வாய் மற்றும் மேல்படுவூர் ஆகிய கிராமங்களிலும் 

14.07.2023 அன்று வெள்ளிக்கிழமை காலை 09:00 மணி முதல் பிற்பகல் 03:00 மணி வரை மின் தடை ஏற்படும். இத்தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், காஞ்சிபுரம் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.    

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.   

No comments

Thank you for your comments