மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ. 4,58,400/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கல்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மையம் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (10.07.2023) மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 311 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.
இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 6 மாற்றுத்திறனாளிகள் பயனாளிகளுக்கு ரூ.4,58,400/- மதிப்பிலான நவீன செயற்கை கால்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்கள். மேலும் சென்னையில் பல்வேறு விளையாட்டு அரங்கங்களில் நடைபெற்று வரும் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில், காஞ்சிபுரம் மாவட்டம் ஆண்களுக்கான பொது பிரிவில், கிரிக்கெட் போட்டியில் மூன்றாம் இடம் பெற்று வெற்றி பெற்ற வீரர்களும், சிலம்பம் விளையாட்டில் மான் கொம்பு பிரிவில் மூன்றாம் இடத்தில் வெற்றி பெற்ற பாலகிருஷ்ணன் என்ற வீரரும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.அர்பிட்ஜெயின், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.பாபு, காஞ்சிபுரம் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருமதி.ரா.சுமதி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி.இரா.மலர்விழி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் திரு.எஸ்.இரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments