தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) 2023 ஆண்டிற்கான நேரடி சேர்க்கை அறிவிப்பு
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளதாவது,
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள், ஈரோடு மற்றும் கோபிசெட்டிபாளையத்தில் பொறியியல் (எலக்ட்ரீசியன், பிட்டர், மெசினிஸ்ட், டர்னர், ஒயர்மேன், வெல்டர், டெக்ஸ்டைல்ஸ், மெக்கானிக் மோட்டர் வெகிக்கிள், ஏசி மெக்கானிக்) மற்றும் பொறியியல் அல்லாத (கம்ப்யுட்டர் ஆபரேட்டர் மற்றும் கட்டிடபட வரைவாளர்) மற்றும் Industry 4.0 திட்டத்தின் கீழ் அதிநவீன தொழில்நுட்பத்துடன் புதிதாக துவக்கப்படவுள்ள தொழிற்பிரிவுகளில் (Manufacturing Process Control and Automation, Industrial Robotics and Digital Manufacturing Technician, Basic Designer and Virtual verifier, Advanced CNC Machining Technician) 2023 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட சேர்க்கை 12.07.2023 உடன் நிறைவடையவுள்ளது.
இதனைத் தொடர்ந்து மீதமுள்ள காலியிடங்களை 100 % பூர்த்தி செய்திடும் பொருட்டு 13.07.2023 முதல் நேரடி சேர்க்கை நடைபெறவுள்ளது.
மேலும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் காலியிடங்கள் பூர்த்தி செய்யப்படும் என்பதால் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் பயிற்சி பெறுபவர்களுக்கு தரமான பயிற்சி வழங்கப்படுவதுடன் மாத உதவித்தொகை ரூபாய் 750, விலையில்லா லேப்டாப், சைக்கிள், சீருடை, பாட புத்தகங்கள், காலணி மற்றும் பஸ் பாஸ் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.
மேலும் 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த பெண் பயிற்சியாளர்களுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் ரூ.1000 /- மாதந்தோறும் வழங்கப்படும்.
8-ஆம் வகுப்புடன் இரண்டாண்டு ஐடிஐ பயிற்சி மற்றும் 10-ஆம் வகுப்புடன் இரண்டாண்டு ஐடிஐ பயிற்சி முடித்தவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் முறையே 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், பயிற்சியின் போதே பிரபல தொழில் நிறுவனங்களில் இன்டர்ன்சிப் ட்ரெயினிங் உதவித்தொகையுடன் கொடுக்கப்படும். பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு மத்திய, மாநில அரசு மற்றும் பிரபல தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்துதரப்படும்.
மேலும் விபரங்களுக்கு முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஈரோடு 0424-2275244 மற்றும் உதவி இயக்குநர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், ஈரோடு 0424-2270044 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும் என ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்: (அசல் மற்றும் நகல்)
⦿ 8-ஆம் வகுப்பு / 10 -ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (2021 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் 10ஆம் வகுப்பு முடித்திருப்பின் 9 ஆம்வகுப்பு)
⦿ மதிப்பெண் சான்றிதழ்
⦿ மாற்று சான்றிதழ்
⦿ சாதி சான்றிதழ்
⦿ ஆதார் அட்டை
⦿ Passport Size photo-4
⦿ விண்ணப்பக் கட்டணம் ரூ.50/-மற்றும் சேர்க்கைக் கட்டணம் ரூ.200/- ஒரு அசல் மதிப்பெண் சான்றிதழுக்கு மேல் வைத்திருப்பவர்களுக்கு ஒவ்வொரு அசல் மதிப்பெண் சான்றிதழுக்கும் ரூ.50 /-
மேற்காணும் ஆவணங்களை நேரில் எடுத்து வரவும். ஆன்லைனில் பதிவுக்கட்டணம் ரூ.50 செலுத்த ATM அட்டை / Phone pay / G-pay கொண்டு வரவும்.
வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், ஈரோடு மாவட்டம்.
No comments
Thank you for your comments