பட்டகத்தியால் மிரட்டிவந்த 3 கொள்ளையர்கள் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு
காஞ்சிபுரம் வையாவூர் சாலையில் வசித்து வருபவர் உதயகுமார்(22).இவர் இருங்காட்டுகோட்டை உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம்இரவு பணி முடித்துவிட்டு நள்ளிரவு 2 மணியளவில் வீடு திரும்பி கொண்டிருந்த போது காமாட்சியம்மன் சன்னதி தெரு பகுதியினை கடந்து பழைய ரெயில்வே நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் மூவர் பட்டாகத்தியை கொண்டு உதயகுமாரை மிரட்டி அவரை அடித்து அவரிடமிருந்த செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றை பறித்து கொண்டு மூவருமே இருசக்கர வாகனத்திலேயே தப்பி சென்றுள்ளனர்.
இவர்களிடமிருந்து பிழைத்தால் போதுமென உதயகுமார் அச்சத்தில் இருந்திருக்கிறார்.இதனையெடுத்து உதயகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கைபற்றி போலீசார் தேடி வந்தனர்.
அதே போல் கடந்த 7-ஆம் தேதியன்றும் பேருந்து நிலையம் அருகே காலமானார் சாலையில் ஆந்திரா சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த அஜிஸ் பாஷாவிடமும் கத்தியை காட்டி மிரட்டி செல்போன்,பணம் ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பிசென்றவர்களும் இவர்கள் என சிசிடிவி காட்சிகளின் மூலம் உறுதி செய்தனர்.
இந்த நிலையில் போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் தாமல்வார் தெரு பகுதி வழியே பரத்,மணிகண்டன்,பாலச்சந்தர் ஆகிய இம்மூவரும் பைக்கில் சென்று கொண்டிருந்த நிலையில் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இதனையெடுத்து இவர்களிடம் நடத்தப்பட்ட கிடுக்குபிடி விசாரணையில் காஞ்சிபுரம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.இதனையெடுத்து இவர்களிடமிருந்து 2 செல்போன், 1 பட்டாகத்தி, அவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனம ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதனையெடுத்து மூவரையும் கைது செய்த சிவகாஞ்சி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இதன்மூலம் தொடர்ந்து காஞ்சிபுரம் மாநகர பகுதிகளில் அண்மை நாட்களாக நடைபெற்று வந்த தொடர் வழிபறியில் ஈடுபட்டு வந்தவர்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் தொழிற்சாலை பணியாளர் ஒருவர் நள்ளிரவில் நடந்து சென்ற போது கத்திமுனையில் வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

.jpg)
No comments
Thank you for your comments