Breaking News

மோட்டார் சைக்கிள் மெக்கானிக்காளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் மே தின பேரணி

காஞ்சிபுரத்தில் மோட்டார் சைக்கிள் மெக்கானிக்காளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் மே தின பேரணி 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



காஞ்சிபுரம் மாவட்டம் மோட்டார் சைக்கிள் மெக்கானிக் காலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் மே தின ஊர்வலம் விமர்சையாக நடைபெற்றது 


இதில் காஞ்சிபுரம் ரங்கசாமி குளம் பகுதியில் புறப்பட்ட இந்த ஊர்வலம் ரெட்டி பேட்டை, ரயில்வே ரோடு, பி.எஸ்.கே., தெரு கவரை தெரு வணிகர் தெரு வழியாக அண்ணா அரங்கம் வரை சென்று மாநகராட்சி அலுவலகத்தின் வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி கர்மவீரர் காமராஜர் பேரறிஞர் அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து நிறைவு செய்தனர். 

இதில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர் இதில் கௌரவ தலைவர் ராமலிங்கம், சங்கத் தலைவர் பாரதி துணைத் தலைவர் மனோகரன், செயலாளர் குமாரராஜன், துணைச் செயலாளர் ராஜாராம். பொருளாளர் ஞானம், துணைப் பொருளாளர் கோபி சட்ட ஆலோசகர் வரதா சா. கோபாலன். உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்ச்சியின் முடிவில் சங்க செயலாளர் குமாரராஜன் கலந்து கொண்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் சிறப்பான பாதுகாப்பு வழங்கிய காவல்துறையினருக்கும் நன்றிகளை தெரிவித்தார்.

No comments

Thank you for your comments