Breaking News

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் 90.28% தேர்ச்சி

காஞ்சிபுரம் மாவட்டம் பள்ளிக் கல்வித் துறை சார்பாக மார்ச்/ஏப்ரல் 2023இல் நடைபெற்ற 10ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 90.28 சதவீத மாணவமாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி தகவல் :


மார்ச்/ஏப்ரல் 2023 இல் நடைப்பெற்ற 10ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பாக 8341 மாணவர்களும், 7943 மாணவிகளும் என மொத்தம் 16284 மாணவமாணவிகள் அரசுத் தேர்வில் கலந்து கொண்டனர். இதில் 14702 மாணவமாணவிகள் 10 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றார்கள். சராசரியாக 90.28 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 85.92 சதவீதமும்மாணவிகள் 94.86 தேர்ச்சி சதவீதமும் பெற்றுள்ளனர். மாணவிகள்மாணவர்களை விட 8.94 சதவீதம் கூடுதலாக பெற்றுள்ளனர். இவ்வாண்டு மாவட்டத்தின் தரம் 25வது இடத்தில் உள்ளது.

அரசுப் பள்ளிகளின் சராசரி தேர்ச்சி சதவீதம் 87.16%. மாநில அளவில் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தின் அடிப்படையில்காஞ்சிபுரம் மாவட்டம் 24வது தர வரிசையினை பெற்றுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி ..., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

 செய்தி வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments