காஞ்சிபுரத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் மாபெரும் ரத்ததான முகாம்
காஞ்சிபுரம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ரத்ததான முகாம் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கினர்.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மற்றும் பேரறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனைக்கு அதிக அளவில் ரத்தம் தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில் காஞ்சிபுரம் வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஆண்டு தோறும் 200க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் காஞ்சிபுரம் வழக்கறிஞர் சங்கம் சார்பில் வழக்கறிஞர் அருள்நாதன் ஏற்பாட்டில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் வழக்கறிஞர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கினர். ரத்த தானம் வழங்கிய நபர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஆண்டுதோறும் வழக்கறிஞர் சங்கம் சார்பில் ஏராளமான ரத்ததானம் அளித்து வருவதால் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் பேரறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனைகளுக்கு பிரித்து அனுப்பப்படுவதால் நோயாளிகளுக்கு ரத்தம் தட்டுப்பாடு குறைகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.



No comments
Thank you for your comments