காஞ்சிபுரம் மேற்கு மண்டல பாஜக நகரம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
காஞ்சிபுரம் மேற்கு மண்டல பாஜக நகரம் சார்பில் பாஜக துவங்கிய நாளையொட்டி ஒட்டி கொடியேற்றி தண்ணீர் பந்தல் திறந்து கொண்டாடப்பட்டது.
காஞ்சிபுரம் சாலை தெருவில் பாஜக துவங்கிய நாளை ஒட்டி மேற்கு மண்டல பாஜக தலைவர் காஞ்சி ஜீவானந்தம் தலைமையில் கட்சி கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது. மாவட்டத் தலைவர் கே எஸ் பாபு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்சி கொடி ஏற்றி சுவற்றில் தாமரை மலர்ந்தது என்பதை அறிவுருத்தும் வண்ணமாக சுவர் தாமரை ஓவியம் வரையப்பட்டும். பொதுமக்கள் பயன்படும் தண்ணீர் பந்தல் திறந்து இதில் பழங்கள், இனிப்புகள், குளிர்பானங்கள் வழங்கப்பட்டது.
மேலும்புதிதாக கட்சியில் சேர்ந்த உறுப்பினர்களுக்கு கதர் ஆடை அணிவித்து உறுப்பினர் அடையாள அட்டையும் வழங்கப்பட்டது.
இதில் கூரம் விஸ்வநாதன்.கோட்டீஸ்வரன். காயத்ரி. ராஜகுமாரி. சென்ட்ரிங் சங்கர்.சரவணன் என்கிற யுவராஜ் .தியாகு வெங்கடேசன். சங்கர். சந்தானம். ஜவகர் பாபு. ராஜாராம். நாமதேவன். மகளிர் அணி. மஞ்சுளா தமிழ்ச்செல்வி. உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்




No comments
Thank you for your comments