காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்பபிரிவு நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் கலந்துரையாடல் கூட்டம்!
காஞ்சிபுரம், ஏப்.08-
காஞ்சிபுரம் மாவட்ட அதிமுகதகவல் தொழில்நுட்ப பிரிவுநிர்வாகிகள்ஆலோசனைமற்றும்கலந்துரையாடல் காஞ்சிபுரம் தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
இதில் கழக செய்தி தொடர்பாளரும், கழக தகவல் தொழிநுட்ப பிரிவு மண்டல செயலாளருமான கோவை சத்யன் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். உடன்கழக அமைப்புச்செயலாளரும், மத்தியகூட்டுறவு வங்கி தலைவருமான வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் குன்றத்தூர் ஒன்றிய கழகச் செயலாளருமான மதனந்தபுரம் பழனி, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம், கழக எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் எஸ்.எஸ்.ஆர். சத்யா, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ். சோமசுந்தரம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சதீஷ், பகுதி கழக செயலாளர்கள் என். பி.ஸ்டாலின், பாலாஜி, ஜெயராஜ், கோல்டுரவி, ஒன்றிய கழக செயலாளர்கள் தும்பவனம் ஜீவானந்தம், களக்காட்டூர் ராஜி, பேரூராட்சி கழக செயலாளர் அரிகுமார், மாமன்ற உறுப்பினர்கள் சண்முகானந்தம், சிந்தன், பிரேம குமார் உள்ஜிட்டோர் உள்ளனர்.

No comments
Thank you for your comments