திமுகவில் "உடன்பிறப்புகளாய் இணைவோம்" என்ற முழக்கத்துடன் தாமல் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு மற்றும் கழக பவளவிழா ஆண்டு முன்னிட்டு ஒரு கோடி புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி "உடன்பிறப்புகளாய் இணைவோம்" என்ற முழக்கத்துடன் தொடங்கியது.
காஞ்சிபுரம் வடக்கு ஒன்றியம் தாமல் ஊராட்சியில் ஒன்றிய கழக செயலாளர் பிஎம்.குமார் தலைமையிலும் ஒன்றிய கழக நிர்வாகிகள், இரா.இளஞ்செழியன், மகாலட்சுமி ராஜசேகர், பொருளாளர் வேலுச்சாமி மாவட்ட பிரதிநிதிகள் எஸ்எஸ்ஆர் சசிக்குமார், என்.கருணாகரன் முன்னிலையில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் அறிவிப்பின்படி காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர்-கழக மாணவரணி செயலாளர் சிவிஎம்பி எழிலரசன், நாடாளுமன்ற உறுப்பினர் ஜி செல்வம், கிளை கிளைகழக செயலாளர்களிடம் உறுப்பினர் படிவம் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய பெருந்தலைவர் மலர்க்கொடி குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார், கே.எம்.சம்பத் மற்றும் கிளைகழக செயலாளர்கள் நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



No comments
Thank you for your comments