Breaking News

இஸ்லாமிய பெருமக்கள் ரமலான் பெருநாள் சிறப்பு தொழுகை கொண்டாட்டம்..

காஞ்சிபுரம் :

இஸ்லாமிய பெருமக்கள் ரமலான் பெருநாள் சிறப்பு தொழுகையுடன் கொண்டாடினர்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்தி சாலை தேரடி அருகே உள்ள  சுன்னத் ஜமாத் பள்ளிவாசல் (எ) ஷேக் கைருல்லாஹ் மஸ்ஜித் பள்ளிவாசலில் ஒரு மாத கால நோன்புக்குப் பிறகு  மௌலானா மௌலவி K.I. முஹம்மத் காலித் காஷிபி தலைமை இமாம் அவர்கள்  தொழ வைத்து சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். 

நிகழ்வில் 2000 பேர் மேற்பட்ட ஜமாத்தார்கள் சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டனர் தொழுகைக்குப் பிறகு ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து பெருநாள் நல்வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.






No comments

Thank you for your comments