காலி மது பாட்டில்கள் மாலையுடன் சென்று ஆட்சியரிடம் மனு
காலி மது பாட்டில்கள் மாலையுடன் டாஸ்மாக் கடை அகற்ற பிஜேபி ஆன்மிக மற்றும் ஆலயம் மேம்பாட்டு பிரிவு சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.
காஞ்சிபுரம் அன்னை இந்திரா காந்தி சாலையில்உள்ள சித்திரகுப்தர் ஆலயம் அருகே அமைந்துள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என பல்வேறு பக்தர்களின் கோரிக்கைகளை ஏற்று கடந்த 27-12-2022 அன்று அமைச்சர் தாமோ அன்பரசன் கடையை அகற்ற உத்திரவு பிறப்பித்தார்.
இதுவரை டாஸ்மாக் நிர்வாகம் அதனை நடைமுறைப்படுத்தவில்லை. இதனை தொடர்ந்து ஆன்மீகத்தின் புனிததன்மையை சீர்குலைக்கும் விதமாக இந்த கடை செயல்பட்டு வருகிறது எனவும் இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட பிஜேபி ஆன்மீக மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாவட்டத் தலைவர் அதிசயம் ப.குமார் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
இதில் காலி மது பாட்டில்கள் மாலையுடன் ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
உடன் குமாரசாமி ரயில்வே வெங்கடேசன், துளசி குமார், சதீஷ், விஸ்வநாதன் வாசுதேவன் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் 27-02-2023 அன்று கடையை அகற்ற வலியுறுத்தி கடை முன் அமர்ந்து அறவழிப் போராட்டம் நடத்திட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது
No comments
Thank you for your comments