Breaking News

காலச்சக்கரத்தின் எதிரொலி : அரசு இடத்தை ஆக்கிரமித்து அமைத்த சாலை அகற்றம்... அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை...,

திருவள்ளூர்: 

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டத்திற்கு உட்பட்ட சோராஞ்சேரி ஊராட்சியில் ஆயில்சேரி கிராமத்தில் தனியார் விற்பனை இடத்திற்கு அரசு இடம் களம் புறம்போக்கில் சாலை அமைத்ததில் முறைகேடு நடந்துள்ளதாகவும் ஊராட்சி மன்ற தலைவர் சுகுமார் மாமூல் வாங்கிக்கொண்டு இந்த வேலையை செய்து உள்ளார் என்று மக்கள் குற்றச்சாட்டை மக்களின் குரலாக  காலச்சக்கரத்தில் ஜனவரி 5 ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டது. 



இதன் எதிரொலியாக பூந்தமல்லி வட்டாட்சியர் மாலினி அவர்களின் உத்தரவின் பெயரில் சோராஞ்சேரி கிராம அலுவலர் சகிலா பானு மற்றும் கிராம அலுவலர் பாலாஜி அவர்களின் முன்னிலையில் அந்த சாலை முழுவதுமாக அகற்றப்பட்டது 

இதனால் இந்த சாலையை காட்டி விற்பனை இடத்தை அதிக விலைக்கு விற்று வந்த தொழிலதிபர் தற்பொழுது அந்த இடத்தை அதிக விலைக்கு விற்க முடியாமல்  புலம்பி வருகிறார்  

இந்த சாலையை வருவாய்த் துறையினர் இதற்கு முன்னால் இரண்டு முறை அகற்றிய பிறகும் மீண்டும் இரவோடு இரவாக ஆட்களை வைத்து சாலை அமைத்து தனது விற்பனையை தொடர்ந்து வந்தார். 

இதனையடுத்து,  வருவாய் துறையினர்  சட்ட நடவடிக்கை மேற்கொண்டு காவல் துறையில் இவர் மீது புகார் அளித்துள்ளனர். 

இந்நிலையில், 3வது முறையாக அந்த சாலையை அகற்றி உள்ளனர்.  மீண்டும் இதே வேளையில் ஈடுபட்டால் இவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 

இவருக்கு உதவிய சில பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கேட்டுக்கொண்டனர் 

இந்த செய்தியை வெளியிட்டு அரசுக்கு தெரியப்படுத்தி இந்த சாலையை முழுவதுமாக அகற்றிய அதிகாரிகளுக்கும், காலச்சக்கரம் நாளிதழ்க்கும் அப்பகுதி மக்கள் வாழ்த்துக்களையும்  நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர். 

No comments

Thank you for your comments