இந்து முன்னணி மாவட்ட செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானம்
சத்தியமங்கலம் :
சத்தியமங்கலம் தனியார் கூட்ட வளாகத்தில், ஈரோடு மேற்கு மாவட்ட இந்து முன்னணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்துமுன்னணி மாவட்ட தலைவர் குருசாமி தலைமையில், மாவட்ட பொருளாளர் சுரேஷ்குமார் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இந்துமுன்னணி மாநில செயலாளர் செந்தில்குமார் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் மற்றும் ஈரோடு மேற்கு மாவட்ட இந்துமுன்னணியினைச் சார்ந்த மாவட்ட, நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை சத்தி நகர, ஒன்றிய இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.
இதில், மாவட்ட முழுவதும் நகர், ஒன்றிய வாரியாக புதிய பொறுப்பாளர்களை நியமிப்பதற்காக பொதுக்குழு நடத்துதல் வேண்டும் என தீர்மானங்கள் முடிவு செய்யப்பட்டது.
No comments
Thank you for your comments