73-வது காசநோய் வில்லைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்த்தி வெளியீடு
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 73-வது காசநோய் வில்லைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார்கள்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (14.02.2023) 73-வது காசநோய் வில்லைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் வெளியிட, துணை இயக்குநர் (காசநோய் பிரிவு) மரு.மு.காளீஸ்வரி அவர்கள் பெற்றுக் கொண்டார்.
இந்த ஆண்டு 40,800 காசநோய் வில்லைகள் ரூ.2,04,000/- மதிப்பில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதன் மூலம் திரட்டப்படும் நிதி காசநோய் தடுப்பு திட்டத்திற்கான ஆராய்ச்சி, மருந்துகள் மற்றும் இதர மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக கூடுதல் நிதி ஆதாரமாக பயன்படுத்தப்படுகிறது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள காசநோயாளிகளுக்கு நிதி உதவி செய்வதற்கும் காசநோய் வில்லைகளின் விற்பனை தொகை பயன்படுத்தப்படுகிறது.
இக்காசநோய் வில்லைகள் மருத்துவத்துறை மட்டும் அல்லாது வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி அலுவலர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலர்கள் மூலமாக விற்பனை செய்யப்படும்.
எனவே பொதுமக்கள் இந்நோயை முற்றிலும் குணப்படுத்த ஒத்துழைப்பு கொடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்கள்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments