சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது
அனைத்து ஒன்றியங்களுக்குட்பட்ட கிராம ஊராட்சிகளில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு உத்தமர் காந்தி விருது வழங்குதல்- மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, தெரிவித்துள்ளார்.
கிராம ஊராட்சிகளில் வெளிப்படை தன்மையுடன் சிறந்த நிர்வாகத்தினை வழங்கி, அனைத்து அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்து நீடித்த மற்றும் நிலைத்த வளர்ச்சி இலக்குகளை எட்டும் வகையில் சிறப்பாக செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு 2022-ஆம் ஆண்டு முதல் உத்தமர் காந்தி விருது மீண்டும் வழங்கப்படும் என முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
🖱 அமைச்சர் உதயநிதிக்கு எந்த துறை சரியாக இருக்கும்...? - யோசனை கூறிய அண்ணாமலை
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளை விருதுக்கு மதிப்பீடு செய்ய மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) மற்றும் அரசு சாரா நிறுவனம் ஆகியோரை உள்ளடக்கிய மாவட்ட அளவிலான தேர்விக்குழு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு அமைக்கப்பட்டுள்ளது
எனவே காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளும் இவ்விருதுக்கு விண்ணப்பம் செய்ய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் இணையதளமான http://tnrd.tn.gov.in/ என்ற முகவரியில் தேர்வு செய்து கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பயனர் முகவரி மற்றும் கடவுச்சொல்லை பயன்படுத்தி உள்நுழைவு செய்து அறிக்கை எண்.12-ஐ சுட்டி கருத்துரு காரணிகளை தேர்வு செய்து படிவத்தினை முறையாக 17-ஆம் தேதிக்குள் பதிவு செய்திடவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா.ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments
Thank you for your comments