Breaking News

போத்தனூர் பகுதியில் சாலை ஓரத்தில் கொட்டப்பட்ட கழிவு மருந்துகள்

கோவை ஜனவரி 29

போத்தனூரிலிருந்து செட்டிபாளையம் செல்லும் வழியில் மாநகராட்சி கழிவுநீர் பண்ணை வளாகம் உள்ளது.


இதையடுத்து சிறிது தொலைவில் சாலையின் இடதுபுறம் மருந்து பாட்டில்கள் மற்றும் பேப்பர்கள் கொட்டப்பட்டிருந்தன. தகவலறிந்த மாசு கட்டுப்பாட்டு வாரியத்தினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். 

அவற்றை மருத்துவ கழிவை அழிக்கும் நிறுவனத்தினரை வரவழைத்து அகற்றினர். மேலும் அவர்கள் நடத்திய விசாரணையில், மருந்து விற்பனை பிரதிநிதி ஒருவர் வீட்டை காலி செய்துள்ளார். 

அப்போது தனக்கு தெரிந்தவரிடம் வீட்டிலுள்ள மருந்துகளை வெளியே போட்டுவிடுமாறு கூறியுள்ளார். 

அந்நபர் மேற்குறிப்பிட்ட இடத்தில் கொட்டிச்சென்றதும் தெரிந்தது.

No comments

Thank you for your comments